Monday, February 4, 2008

என் வீடுபேறு

வெளியே வரம்பாய் ஒளியே பரப்பாய்க்
கண்டேன் அகண்டஎன் வீடு

மெய்யுடம்பே உடையாம் ஆருயிரே மெய்யுடம்பாம்
மெய்யுணர்வே அளித்ததவ் வீடு

அருளே என்பொருளென அன்பே எனதுருவெனத்
தெருட்டி யதெனையவ் வீடு

இருக்கவும் பெருகவும் சிறக்கவும் யார்க்கும்
அருளொளி அளித்ததவ் வீடு

பசியுந் தாகமும் நீக்கத்தெள் ளமுதைப்
புசிக்கத் தந்ததவ் வீடு

No comments:

Post a Comment

உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்