வெளியே வரம்பாய் ஒளியே பரப்பாய்க்
கண்டேன் அகண்டஎன் வீடு
மெய்யுடம்பே உடையாம் ஆருயிரே மெய்யுடம்பாம்
மெய்யுணர்வே அளித்ததவ் வீடு
அருளே என்பொருளென அன்பே எனதுருவெனத்
தெருட்டி யதெனையவ் வீடு
இருக்கவும் பெருகவும் சிறக்கவும் யார்க்கும்
அருளொளி அளித்ததவ் வீடு
பசியுந் தாகமும் நீக்கத்தெள் ளமுதைப்
புசிக்கத் தந்ததவ் வீடு
No comments:
Post a Comment
உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்