நித்தியமாய் வாழுமே என்பூரணம் யாவிலும்
நிச்சயமாம் நீதியதைக் காண்
அற்புதமாய் ஒளிருமே என்சுயஞ்சுடர் யாவிலும்
சிற்பரமாம் பதமதில் தோய்
பேரின்பப் பெருவாழ்வென் பேரிருப்பை யாவிலும்
பாரென்றும் இறவாநிலை சேர்
தெள்ளமுதாய்ப் பாயுமேயென் ஆன்மநேயம் யாவிலும்
வெள்ளமதாம் தேறலையே நாடு
என்னியல் விளங்குமே பேரன்பாய் யாவிலும்
அன்பதை இருதயத் தேந்து
No comments:
Post a Comment
உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்