வீரிய விதைகளாய்
மண்ணில் விழுந்தோமென்பதை
மறந்ததால்
அமர விருட்சங்களாய்
விண் நோக்கி எழாமல்
சிதைகளில் எரிந்தோம்
உன் தாய் தந்தையராம்
யாம்
உயிரெமக்கு மெய்யுணர்த்தி
உன் மெய்யில் எம்முயிரைக் கரைத்து
மகன் நீ
எமக்குச் செய்த இறுதிக் கடனை
ஈடு செய்ய
அன்பாய் என்றென்றும்
உன் இருதயத்தில் வழிகிறோம்
யாம்
கலங்காதே மகனே
உன்னில் நீடூழி வாழ்கிறோம்
யாம்
No comments:
Post a Comment
உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்