Thursday, March 27, 2008

இறுதிப் பேருறுதி

தூல விழிகளை மூடி
உயிராம் நான்
ஞான விழி திறந்து
மெய்யுணர்கிறேன்.

மெய்யுணர்வை
உலக உயிர்த்திரளனைத்தும்
எய்தே தாம் உய்ய
மெய்யாம் உன்னில்
உயிராம் நான்
வேறற ஒன்றி
நீடூழி வாழ்கிறேன்.

உன்னிரு கரங்களினூடே பாயும்
என் இருதய அன்பை
உலக உயிர்த்திரளனைத்தும்
தாம் பருகும்
மெய் வழியாய்
நித்திய ஜீவனில்
நீ
நிலைபெறுவாய்.
இது
தந்தை நான்
மகனுனக்குச் செய்யும்
இறுதிப் பேருறுதி.
இதை அறிந்தே
நீ
எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
ஊன்றியே
எப்போதும் நில்
.

No comments:

Post a Comment

உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்