பாதை தெரியுது ஜன்னலின் வழியே
பாதங்கள் இருக்கு கதவைத் திறக்க
நடந்தால் போதும் இலக்கைச் சேர
முடக்கம் உதறி முனைப்போ டெழுந்தால்
முடியும் நினைத்தது திண்ணம் திண்ணம்
அடியெடு மண்ணும் விண்ணும் உன்வசம்
விழிதிற நிச்சயம் விடியும் வாழ்க்கை
வழிஉள அறியும் விளக்கும் உன்னிடம்
எழுஎழு இக்கணம் மெய்தான் மெய்தான்
விழுந்துநீ கிடப்பது அறிந்திடு அறிந்திடு
எழுந்துநீ நிற்பதும் மெய்யே மெய்யே
எழுந்தால் மனிதா நீயே கடவுள்
விழுந்தே கிடந்தால் புழுவினும் இழிஞன்
எழுஎழு இக்கணம் அமர தேவமாய்
No comments:
Post a Comment
உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்