அதோ
தெரிகிறது
புதுயுக விடியலின்
வெளிச்சம்!
மடியும்
மடமையிருளின்
குருதி பூசிச்
சிவந்த
புரட்சிப் பூக்களில்
சிரிக்கும்
புது வசந்தமே!
பண
மன
வறுமைகள்
நிற
இனப்
பிரிவுகள்
சாதி
மதப்
பிளவுகள்
இவற்றின்
கல்லறைகளிலிருந்து
மனிதன்
கருவறையில்
தொலைத்த
தன் ஆறாவது அறிவை
மீட்கிறான்.
வேருங் கிளையும்
இலையுங் காயும்
மலருங் கனியும்
தங்கள்
சாயலும்
செயலும்
உறங்கச் செய்த
மரவின
ஒருமையுணர்வை
ஞாபகங் கொள்ளும் நாள்
அதோ
தெரிகிறது
புதுயுக விடியலின்
வெளிச்சம்!
No comments:
Post a Comment
உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்