மனிதனே!
என்னை விட்டு விலகி
நீ வெகு தூரம் சென்று விட்டாய்.
ஆனாலும்
உன்னை விட்டு விலக
எனக்கு மனமில்லை.
எனவே
உன் தாள்களின் தூசுகளைத்
தொட்டுக் கொண்டே நிற்கின்றன
என் தாள்கள்.
நீ மனந்திரும்பும் ஒரு கணத்தில்
என் தாள்களின் தூசுகளைத்
தொட்டு நிற்கும்
உன் தாள்கள்.
நீ மனந்திரும்புவாயென்றே
காத்து நிற்கின்றன என் தாள்கள்
நீ நிற்கும் இடத்தில்
யுகயுகமாய்
இன்னுங்கூட.
முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "மனதில்..." கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை
No comments:
Post a Comment
உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்