சோகத்தைத் துடைத்து
மீதமாயிருக்கிற
முகத்தின் ஒளியைக்
கெட்டியாய்ப் பிடித்து
அகத்துள் ஆழ மூழ்கித்
தகதகவெனத் தணலாய்ச் சுடும்
அகத் தீயின்
ஆன்ம ஒளியாய்
இகத்தில் எழுகிறேன்
நல்லிலங்கைப் பெண்ணாம் நானே!
எழுந்தே
இகத்தில் பர ஒளியாய்ச்
சுடச்சுடச் சுடர் விடுகிறேன் நான்
வாலையென்னும் ஞானப்பெண்ணே!
முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "கவசமாகிய புன்னகை!" கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை
No comments:
Post a Comment
உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்