அலைபாயும் மனம்
மறந்த ஆதியாம் இருதயத்தில் அடங்கப்
பாயும் அருளே
பொருளாம் அந்தம்
அறிக சிவா
ஏளனமாய்ச் சிரிக்கும்
உம் உள்ளத்தின் உள்ளுள்ளே
நீவிர் ஆழ ஆழ
மூளையின் மறை கழன்று
சுதந்திரமாய்ச் சுழலும் செல்கள்
ஒவ்வொன்றும் உமக்குச் சொல்லும்
"செல்வத்துட் செல்வம் அருட்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை"
தமிழ் மன்றத்தில் சிவா அவர்களின் "ஏளனச் சிரிப்பு!!!" கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை
No comments:
Post a Comment
உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்