Sunday, April 13, 2008

இலையுதிர்கால நிலைமை

இலைகள் விலகிய பின்னும்
கிளைகளை விட்டகலவில்லை
வேர்கள்

கிளைகளைத் துறந்து
சருகுகளாய்
வேர்களில் விழுந்து
எருவாகி
மீண்டும் துளிர்க்கத் தவமிருக்கும்
இலை முனிகள்

சருகுகள் நடுவே
நிலை பெயராமல் நிற்கிறது
இலையுதிர்கால மரம்

கந்தலான இலையுடைகளைக் களைந்து
நிர்வாணமான மர உடம்பு
மீண்டும் புத்தாடை உடுத்தக் காத்திருக்கிறது
வேர்களோடும் கிளைகளோடும்

No comments:

Post a Comment

உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்