மனிதா!
உன்னை விட்டு
நான் பிரியவே இல்லை.
நமக்கிடையே
நீ
உருவாக்கியிருக்கும் இடைவெளியிலும்
என் நிபந்தனையற்ற பேரன்பு
நிறைந்தேயிருக்கிறது.
நீ
மனந்திரும்பி என்னைக் கூடும் போது
உன் இருதயத்திலிருந்து வழியும்
என் பேரன்பு.
முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "என்ன பலன்..." கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை
No comments:
Post a Comment
உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்