நெஞ்சில் தாகம்
விழியில் தேடலின்
வியர்வை
உயிரே!
உன் இயக்கம்
என்னில் துடிக்கும்.
மௌன மோகனம்
உன்னிடம்
என் இனிய தமிழமுதும்
தோற்கும்.
கால நியமங்கள் கடந்த
நீ
என் ஞானத் தெருவில்
வழிகாட்டி.
கானப் பறவையிது
பாடும்.
காதல் போதையிலே
திரியும்.
ஒளிரும்
நின் விழி முன்
என் விரலகள்
விரையும்.
முற்றுப்புள்ளியே
இன்றி
இனி
உதிரும் வரிகள்
தொடரும்.
தொடரும்..
தொடரும்...
பி.கு: 1996ல் வெளியான "விழிப்புத் தவங்கள்" என்ற என் கவிதைப் புத்தகத்தில் இடம் பெற்ற ஒரு கவிதை.
No comments:
Post a Comment
உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்