என் கவிதைகள் - நான் நாகரா(ந. நாகராஜன்)
நான் வடித்த கவிதைகளின் தொகுப்பு
Wednesday, May 7, 2008
செதுக்கல்
கல்லுக்கும் சிலைக்கும் இடையே
உளியின் கூப்பிடு தூரத்தில்
சிற்பியின் கனவு
கல் மட்டுமல்ல
செதுக்கப்படுவது
சிற்பியுந்தான்
உடம்பெங்கும் இரணங்களோடு
உயிர்த்தது கல்
சிலையாக
சிற்பியின் பிரசவ வேதனை
உளி வழியே கல்லில் பரவப்
பிறந்தது சிலை
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment