Tuesday, July 22, 2008

முடவனின் முரட்டுத்தனம்

முள் உரசுந்
தாளில்
ஈர மை உலரவில்லை

இமை துறந்த
விழியை
நீண்ட இரா மூடவில்லை

தவங் கிடந்த
கவிதை
எளிதில் வசப்படுவதில்லை

கொம்புத் தேனை
முடவன்
எம்பாமல் விடவில்லை

தாளில்
மை உலரு முன்
விழியை
இரா மூடு முன்
முரட்டு முடவன்
கொம்புத் தேன்
சுவைப்பான்
விருந்தோம்பியும்
செல்வான்

No comments:

Post a Comment

உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்