முள் உரசுந்
தாளில்
ஈர மை உலரவில்லை
இமை துறந்த
விழியை
நீண்ட இரா மூடவில்லை
தவங் கிடந்த
கவிதை
எளிதில் வசப்படுவதில்லை
கொம்புத் தேனை
முடவன்
எம்பாமல் விடவில்லை
தாளில்
மை உலரு முன்
விழியை
இரா மூடு முன்
முரட்டு முடவன்
கொம்புத் தேன்
சுவைப்பான்
விருந்தோம்பியும்
செல்வான்
தாளில்
ஈர மை உலரவில்லை
இமை துறந்த
விழியை
நீண்ட இரா மூடவில்லை
தவங் கிடந்த
கவிதை
எளிதில் வசப்படுவதில்லை
கொம்புத் தேனை
முடவன்
எம்பாமல் விடவில்லை
தாளில்
மை உலரு முன்
விழியை
இரா மூடு முன்
முரட்டு முடவன்
கொம்புத் தேன்
சுவைப்பான்
விருந்தோம்பியும்
செல்வான்
No comments:
Post a Comment
உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்