Thursday, January 20, 2011

மீட்பு

என்னில்
என் "ஐ" கண்டேன்.
மாயை
தொலைந்து போனது.
என் "ஐ" மறந்த உறக்கம் நீங்கி
நெஞ்சுள் விழிக்கிறேன்.
இறுக்கும் அடையாளங்கள் அவிழ
இளக்கும் அன்பில் குழைகிறேன்
பேர் கொண்ட ஆள் நான்
ஊர் மெய்க்குள்
மார்புக்குள் புகுந்தே
வீடு பேறு அடைகிறேன்
பேரது நாதமாக
ஆளது ஜோதியாக
நானது ஓர்மையாக
நானே ஒளிர்கிறேன்
ஞால வீட்டில்
கூட்டுக் குடும்ப
உயிர்த் திரளிடையே
தயவின் செறிவாய்ப்
பூரணமாய்க் கரைகிறேன்
இழந்தது அனந்த இறுக்கங்கள்
மீட்டது ஆனந்த இருப்பன்றோ!

தமிழ் மன்றத்தில் திரு. சென் மார்க் அவர்களின் தொலைந்துபோன நான் என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை

No comments:

Post a Comment

உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்