விடியலின்
ஈர விதைகள்
கனவுப் படகுகளை
யதார்த்தக் கரை
சேர்க்கும் நதிகள்
முயற்சிக்கும்
முன்னேற்றத்திற்கும்
இடையே உள்ள தூரம்
வாழ்க்கை என்னும்
கவிதை எழுத
மெய்
தன்னிலிருந்தே
தயாரிக்கும்
மை
உழைப்பு உளி
உடம்பைச் செதுக்கும் போது
சிதறும் சில்லுகள்
வசந்தப் புரட்சியை
வரவழைக்க
உதித்த
ஒரே புள்ளி கொண்ட
ஆய்த எழுத்துகள்
உடம்பு வில்
உழைப்பில் வளையும் போது
சோம்பலைக் கொல்லும்
அம்புகளைத்
தானே
தயாரித்துக் கொள்கிறது
உயிரின் முடக்கத்துக்கு
உடம்பு இடும்
முற்றுப் புள்ளிகள்
உழைப்புச் சூட்டில்
உடம்பு உலை
உற்பத்தி செய்யும்
நீர்த் துளிகள்
Tuesday, May 13, 2008
பேனா(இன்னும்))
வெள்ளை முட்பரப்பில்
தலையால் நடந்து
மூளையைப் பிழிகிறேன்
அப்பிழிவில் தெரியும்
துடிக்கும் என் இருதய ஈரம்
உலர்ந்தும்
உலராத உயிர்மை
என் உயிர் மை
மை பாய்ந்த காகிதக் கூடும்
என் மெய்
உயிர் மை உறையும் உயர்மெய்
உயிர்மெய்
ஒரு மையின் உண்மையே
கூடுகளனைத்திலும்
ஒரு மெய்யின் உள் மை
உள் மெய்
ஒருமையை உண்
உண் இம்மை
உண் இம்மெய்
உண் மை
உண்மையை உண்ண உண்ண
உன் மெய் விளங்கும்
உன் மை உயிர்மையை
என் மை கசியும்
வெண்மையில் கருமையால்
விழி பிறக்கத் தெரியும்
மெய்ப்பொருள் விளக்கம்
தலையால் நடந்து
மூளையைப் பிழிகிறேன்
அப்பிழிவில் தெரியும்
துடிக்கும் என் இருதய ஈரம்
உலர்ந்தும்
உலராத உயிர்மை
என் உயிர் மை
மை பாய்ந்த காகிதக் கூடும்
என் மெய்
உயிர் மை உறையும் உயர்மெய்
உயிர்மெய்
ஒரு மையின் உண்மையே
கூடுகளனைத்திலும்
ஒரு மெய்யின் உள் மை
உள் மெய்
ஒருமையை உண்
உண் இம்மை
உண் இம்மெய்
உண் மை
உண்மையை உண்ண உண்ண
உன் மெய் விளங்கும்
உன் மை உயிர்மையை
என் மை கசியும்
வெண்மையில் கருமையால்
விழி பிறக்கத் தெரியும்
மெய்ப்பொருள் விளக்கம்
பேனா
உன் இரத்தம்
எம் மொழிகளின்
நாவு
உன் கண்ணீர்
எம் எண்ணங்களின்
வரி வடிவம்
காகிதப் பாதையில்
நீ
நடக்கும் போது
சிந்தும் வியர்வைத் துளிகளே
எம் இலக்கிய விதைகள்
எப்போதும்
எச்சிலைத்
துப்பிக் கொண்டிருக்கும்
உன் அநாகரிகம் தான்
எம் நாகரிகத்தின்
முகவரி
நீ
எம் நெற்றிக் கண்களின்
இமைகளைக் கிள்ளியெறிந்த
ஆறாவது விரல்
காகிதச் சிலுவையில்
எம் எண்ணங்களின்
சிலுவைப்பாட்டை
நீ
வழங்காவிட்டால்
எமக்கு
உயிர்த்தெழல்கள்
இல்லாமலே போய்விடும்
உன் தலை கவிழ்தலில் தான்
மானுடராம்
எம் தலை நிமிர்தல்கள்
நிச்சயிக்கப்படுகின்றன
ஏட்டுப் பாறையில்
உன் தலையால் முட்டி
நீ
செதுக்கும்
தலையெழுத்துக்கள் தாம்
எம் எதிர்காலத் தலையெழுத்தை
நிர்ணயிக்கின்றன
கைக் கூண்டிலிருந்த
விரல்கட்குச்
சிறகாக
நீ
முளைத்த போது
அவை காகித வானில்
பறந்து விட்டுச் சென்ற
சுவடுகள் தாம்
எம் எழுத்துக்கள்
உன் பாதைகள்
எம் இலட்சியங்களை
முடிவு செய்கின்றன
உன் சுவடுகள்
எம் பாதங்களுக்குப்
பாதைகளைத்
தெரிவு செய்கின்றன
உன் குருதித் துளிகள்
எம் நிஜ முகங்களைப்
பிரதிபலித்து விடுகின்றன
விரல்களின் தூக்கில்
தொங்கும் போது
நீ
உயிர்க்கிறாய்
உன் கழுத்தைச் சுற்றி
மனித விரல்களையே
அணிந்த போதையில் தான்
தலை கால் தெரியாமல்
நீ
தலையால் நடக்கிறாயா!
ஆறாவது அறிவு
மனிதனுக்கு வாய்த்த போது
நீ
ஆறாவது விரலாக
முளைத்து விட்டாயா!
விரல்கள்
என்ற ஓரறிவு உயிரிகள்
ஈரறிவு உயிரிகளாய்ப்
பரிணமிக்க
உன்னைத்
தம் நாவாக
வளர்த்துக் கொண்டனவா!
எம் மொழிகளின்
நாவு
உன் கண்ணீர்
எம் எண்ணங்களின்
வரி வடிவம்
காகிதப் பாதையில்
நீ
நடக்கும் போது
சிந்தும் வியர்வைத் துளிகளே
எம் இலக்கிய விதைகள்
எப்போதும்
எச்சிலைத்
துப்பிக் கொண்டிருக்கும்
உன் அநாகரிகம் தான்
எம் நாகரிகத்தின்
முகவரி
நீ
எம் நெற்றிக் கண்களின்
இமைகளைக் கிள்ளியெறிந்த
ஆறாவது விரல்
காகிதச் சிலுவையில்
எம் எண்ணங்களின்
சிலுவைப்பாட்டை
நீ
வழங்காவிட்டால்
எமக்கு
உயிர்த்தெழல்கள்
இல்லாமலே போய்விடும்
உன் தலை கவிழ்தலில் தான்
மானுடராம்
எம் தலை நிமிர்தல்கள்
நிச்சயிக்கப்படுகின்றன
ஏட்டுப் பாறையில்
உன் தலையால் முட்டி
நீ
செதுக்கும்
தலையெழுத்துக்கள் தாம்
எம் எதிர்காலத் தலையெழுத்தை
நிர்ணயிக்கின்றன
கைக் கூண்டிலிருந்த
விரல்கட்குச்
சிறகாக
நீ
முளைத்த போது
அவை காகித வானில்
பறந்து விட்டுச் சென்ற
சுவடுகள் தாம்
எம் எழுத்துக்கள்
உன் பாதைகள்
எம் இலட்சியங்களை
முடிவு செய்கின்றன
உன் சுவடுகள்
எம் பாதங்களுக்குப்
பாதைகளைத்
தெரிவு செய்கின்றன
உன் குருதித் துளிகள்
எம் நிஜ முகங்களைப்
பிரதிபலித்து விடுகின்றன
விரல்களின் தூக்கில்
தொங்கும் போது
நீ
உயிர்க்கிறாய்
உன் கழுத்தைச் சுற்றி
மனித விரல்களையே
அணிந்த போதையில் தான்
தலை கால் தெரியாமல்
நீ
தலையால் நடக்கிறாயா!
ஆறாவது அறிவு
மனிதனுக்கு வாய்த்த போது
நீ
ஆறாவது விரலாக
முளைத்து விட்டாயா!
விரல்கள்
என்ற ஓரறிவு உயிரிகள்
ஈரறிவு உயிரிகளாய்ப்
பரிணமிக்க
உன்னைத்
தம் நாவாக
வளர்த்துக் கொண்டனவா!
Monday, May 12, 2008
அடி முடி அளத்தல்
பூமி பெரிது தான்
மிக மிகப் பெரிது
நீயோ சிறு விதை தான்
மிக மிகச் சிறிது
வீரிய முளை விடும்
சீரிய முனைப்போடு
மேலெழு
மிகப் பெரிய பூமியும்
பிளந்து
உன் தாளடியில்
அடங்கி விடும்
வானம் பெரிது தான்
மிக மிகப் பெரிது
உன் சிறகுகள் சிறியன தாம்
மிக மிகச் சிறியன
சிறகு விரி
பற
விசுவரூப வானம்
வாமனன்
உன் உடம்பில்
ஒடுங்கி விடும்
மிக மிகப் பெரிது
நீயோ சிறு விதை தான்
மிக மிகச் சிறிது
வீரிய முளை விடும்
சீரிய முனைப்போடு
மேலெழு
மிகப் பெரிய பூமியும்
பிளந்து
உன் தாளடியில்
அடங்கி விடும்
வானம் பெரிது தான்
மிக மிகப் பெரிது
உன் சிறகுகள் சிறியன தாம்
மிக மிகச் சிறியன
சிறகு விரி
பற
விசுவரூப வானம்
வாமனன்
உன் உடம்பில்
ஒடுங்கி விடும்
காணாமல் கண்டதை...
அதிகாலையில்
தூரத்தில்
சிரிக்கும் செவ்வரளிப் பூக்களை
விழிகள் கேட்டு மகிழும்
அருகே
பாதையில்
உதிர்ந்து கிடக்கும்
பாரிஜாத மலர்களை
விழிகள் ஒவ்வொன்றாய்ப் பொறுக்கும்
காற்றில் மணக்கும்
பட்டாம்பூச்சிகளை
விழிகள் நுகர்ந்து கிறங்கும்
பசிய புல்வெளியில்
பரிமாறப் பட்டிருக்கும்
பனித்துளிகளை
விழிகள் நக்கிச் சுவைக்கும்
கேட்டும்
தொட்டும்
நுகர்ந்தும்
சுவைத்தும்
போதையேறிய விழிகள்
பார்க்க மறக்கும்
காணாமல் கண்டதைக்
கவிதையாய்ப் பேச
விரல்களிலிருந்து
நாவு நீளும்
தூரத்தில்
சிரிக்கும் செவ்வரளிப் பூக்களை
விழிகள் கேட்டு மகிழும்
அருகே
பாதையில்
உதிர்ந்து கிடக்கும்
பாரிஜாத மலர்களை
விழிகள் ஒவ்வொன்றாய்ப் பொறுக்கும்
காற்றில் மணக்கும்
பட்டாம்பூச்சிகளை
விழிகள் நுகர்ந்து கிறங்கும்
பசிய புல்வெளியில்
பரிமாறப் பட்டிருக்கும்
பனித்துளிகளை
விழிகள் நக்கிச் சுவைக்கும்
கேட்டும்
தொட்டும்
நுகர்ந்தும்
சுவைத்தும்
போதையேறிய விழிகள்
பார்க்க மறக்கும்
காணாமல் கண்டதைக்
கவிதையாய்ப் பேச
விரல்களிலிருந்து
நாவு நீளும்
Sunday, May 11, 2008
சங்கமம்
காத்திருக்கிறேன்.
மனக் குளத்தில்
வார்த்தைக் கற்களாக விழுந்து
பொழுது கழிகிறது.
ஒன்று
இரண்டு
மூன்று
..........
..........
..........
..........
ஆ...
கவிதைக் காதலி
எழுந்து வருகிறாள்
அலைபாயும் குளத்திலிருந்து
என்னை நோக்கி
ஈரம் சொட்டச் சொட்ட
வார்த்தைக் கற்கள் தீர்ந்துவிடப்
பொழுதும் நின்றுவிட
வளியிடைப் போகா முயக்கில்
எம் சங்கமம் நிகழ்கிறது
சிகர உச்சியிலிருந்து
உருண்டு விழுகின்றன
வார்த்தைக் கற்கள்
நின்றுவிட்ட பொழுதை
நகர்த்தி
மனக் குளத்தில்
வார்த்தைக் கற்களாக விழுந்து
பொழுது கழிகிறது.
ஒன்று
இரண்டு
மூன்று
..........
..........
..........
..........
ஆ...
கவிதைக் காதலி
எழுந்து வருகிறாள்
அலைபாயும் குளத்திலிருந்து
என்னை நோக்கி
ஈரம் சொட்டச் சொட்ட
வார்த்தைக் கற்கள் தீர்ந்துவிடப்
பொழுதும் நின்றுவிட
வளியிடைப் போகா முயக்கில்
எம் சங்கமம் நிகழ்கிறது
சிகர உச்சியிலிருந்து
உருண்டு விழுகின்றன
வார்த்தைக் கற்கள்
நின்றுவிட்ட பொழுதை
நகர்த்தி
Subscribe to:
Posts (Atom)