என் மனதில்
உன் காதல் விழுகின்றது
உயிரும் கரைகின்றது
கடவுட் காதலனே
என்னை நான்
தொலைத்தேன்
உன் மூச்சினில்
நான் வாழ்கின்றேன்
எனக்குத் தெரிகிறது
உன் அருவம்
உன்னிலே நானும்
சங்கமமானேன்
இகத்தில் என்னை வைத்தும்
பர வாழ்வை உணர்த்தினாய்
உன்னால் பரமானந்தக்
களி தொடர்கின்றது
என்னில் நீ
பூரணமாய் நிறைந்து விட்டாய்
எனக்குள்ளே மறைந்து விட்டாய்
எழுகிறேன் மண்ணில்
தேவமாம் விடியலாய்
முத்தமிழ் மன்றத்தில் இலங்கை பெண் அவர்களின் "விடியலை தேடி..." கவிதைக்குப் பின்னூட்டமாக இடப்பட்ட என் கவிதை
No comments:
Post a Comment
உம் பொன்னான கருத்துக்களை இங்கே தரவும்