மெய்யே சத்தியம் நிச்சயம் நித்தியம்
மெய்யைப் பொய்யாக்கி இடுவதும் சுடுவதும்
எல்லோர்க்கும் நியதி என்றே கற்பிக்கும்
பொல்லாப்பை நம்பி அல்லலுறும் நம்மனம்
கலை எழுதியது:நான் உங்களிடம் கேட்க நினைத்ததே இம்மரணம் என்னும் கொடுமையிலிருந்து மீள்வது எங்ஙனம் என்பதுதான். சமீப காலமாக மரணத்தின் பயம் என்னை அலைக்கழிக்கவைக்கிறது.![]()
அகர முதல்தரும் அமிழ்த போதம்
அகத்துள் கவனங் குவித்துக் கேட்பாய்
அலைக்கழி மரண பயத்தை அவிப்பாய்
(மாயையிலே சுத்த மாயை அசுத்த மாயை என்று இரு வகை
சுத்த மாயை என்பது அஞ்ஞானத் திமிர், இதுவே அசத்துவம் என்னும் திரிகுணப் பிரதானம்
அந்தத் திமிரானது ஞானம் போல் தன்னைக் காட்டிக் கொண்டு
இந்த ஞாலம் முழுமையையும் அசுத்த மாயையில் அழுத்தும்
அசுத்த மாயை என்பது இரு வகை
ஒன்று இராஜசம் என்னும் அடங்கா இயக்கம், தீவிர வாதம், வன்பு
இன்னொன்று தாமசம் என்னும் இயங்கா முடக்கம், தீவிரத் தூக்கம், பூரண மயக்கம்
ஆக அசத்துவம் என்னும் சுத்த மாயையும் தாமசம் ராஜசம் என்னும் அசுத்த மாயையும் சேர்ந்ததே திரிகுண மாயை.
மொத்த மாயையையும் குழியாகக் கொண்டால்
அசத்துவம் குழியின் மேற்புறம், ஆனால் அது தன்னைக் குன்றின் உச்சமாக எண்ணிப் பெருமிதப்படும் அஞ்ஞானத் திமிர்
ராஜசம் குழியின் நடு பாகம்
தாமசம் குழியின் அடிவாரம்
குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடும் குருடும் குருட்டாட்டம் போடக்
குருடுங் குருடும் குழிவிழுந் தனவே
இது திருமூலர் திருமந்திரம்
Blind will lead the blind and both will fall in the ditch
இது குரு நாதர் இயேசு கிறிஸ்துவின் வேத வாசகம், திருமந்திரத்தின் கடைசி இரு வரிகள் அப்படியே ஆங்கிலத்தில், சர்வ சமய சமரசம் என்பது இதுவே!
குட்டும் எத்தன் = இராஜசம்
குட்டக் குட்டக் குனியும் பித்தன் = தாமசம்
நட்டு வைத்த சதி = அசத்துவம்
குட்டு உடைத்தல் = திரிகுண மாயையை உரித்தல்)