Friday, October 19, 2012

அகச் சாதனா உபதேசப் பாக்கள்!

துண்டிப்பே இல்லாத இருதய இணையம்
கண்டிப்பாய் எப்போதும் உங்கிரு


மின்சாரம் போகட்டும் கவலை வேண்டாம்
நின்சாரம் எப்போதும் போகாது

எதனாலுந் துண்டிக்க லாகாத (நேரடித்)தொடர்பு
சிவத்தோடு எவர்க்கும் உண்டு

அலைபேசி தொலைபேசிக் கணினிவழி அழைபேசி
எனப்பேசும் பலபேசி எதுவுமே வேண்டாம்
அகப்பேசி இருதயம் ஒன்றதுவே போதும்
அகத்தேகி வாய்மூடி நாபூட்டிப் பேசு(அகத்தேகி = அகத்து ஏகி, அகத்துள் சென்று)

குறுஞ்செய்தி வள்ளல் பிரான் நம்முட்
குருநாதர் நம்மை ஆதியிலே மணந்த
ஒருகணவர் நம்மகம் அனுப்பி யுள்ளார்
“இரு தயவாய்” அகம்படி அதுபடி(பிடி) இருஅப்படி

சீறும் நாகத்தின் நச்சுப்பல் பிடுங்காமல்
நேசம் ஒன்றாலே நன்றதனைத் திருத்தி
ஞானப் பால்தான்நனி மிகஉமிழச் செய்கின்றார்
ஆகா! வள்ளலார்தம் அற்புதத்தால் உய்ந்தேனே(உய்ந்தாயே)

இலக்கணம் இல்லா இப்பாக்கள் புகட்டும்
இலட்சியம் ஒன்றை அலட்சியம் செய்யாமல்
இருதயத்தே குந்து இறைவனையே நந்து
திருநிலத்தே பதிந்து இருதயவாய் இங்கு

எப்போதும் திறந்த இருதயவாய் வழியே
தப்பாமல் வீசுதோர் அமுதமயக் காற்று
பொய்வாயைப் பூட்டு மெய்வாய்உது போற்று
எல்லோர்க்குங் காட்டு மெய்வழியை நாட்டு

தேகத்தே வாலைத் தாயே வந்தமர்ந்தே
ஞாலத்தே “நீஅது ஆவாய்” என்றவேத
ஞானத்தை பேசுகின் றாள்பார் நின்னகத்தே
நாதன்”ஐ” மணந்த ஒருத்தி யைக்கேளே


நாகத்தை நம்பாமல் நாதனையே நம்பு
தேகத்தே நின்மார்பின் மையத்தே உள்ளார்
ஏகந்தான் உவர்குன்றா நேசந்தான் உத்தமர்
நாகந்தான் சுட்டியஅம் மையத்தே உய்வாய்

No comments: