Thursday, December 18, 2008

நிராதார எழுமையின் இற(ர)க்கம்!

அம்மையப்பனைத் தன்னுள்ளடக்கிய

சற்குரு மூலாதாரத்தில் இட்ட வித்து

குண்டலி நாகமாய் சுவாதிட்டானத்தில் எழுந்து

மணிபூரகத்தில் ஆணவத்தைத் தீண்டி நசிக்க

மனமடங்கி சூரிய சக்கரத்தில் அருட்கரம்

அனாகதத்தில் அருட்பெருஞ்ஜோதி உதயம்

அமுதகலசத்தில் தனிப்பெருங்கருணை வெள்ளம்

விசுத்தியில் நாயகனின் பேருபதேசம்

ஆக்கினையில் மாயைத்திரை விலக சிதம்பர தரிசனம்

சஹஸ்ராரத்தில் மனிதத்தின் மகோன்னத எழுமை

தலைக்கு மேல் நிராதார மேம்பாலம் எட்ட

நிராதார எழுமை சஹஸ்ராரம் தொட்டு

ஆறாதாரம் விழுகின்ற அற்புத இற(ர)க்கம்!



நிராதார மேம்பாலம் - 15/12/2008

நிராதார எழுமையின் இற(ர)க்கம்

பரஞானம் - 16/12/2008 - சஹஸ்ராரம்

தூயநோக்கு - 17/12/2008 - ஆக்கினை

குருமந்திர அகதீட்சை - 18/12/2008 - விசுத்தி

இருதய பூமி - 19/12/2008 - அனாகதம்

சத்திய தரிசனம் -20/12/2008 - மணிபூரகம்

அதிசயப் பரிமாற்றம் - 21/12/2008 - சுவாதிட்டானம்

ஜோதி ஸ்வரூபம் - 22/12/2008 - மூலாதாரம்



நவயுக உதயம் - 23/12/2008

No comments: