Friday, March 14, 2008

விழித்திருப்பு

மௌனத்தின் விரல்கள்
மந்திர வார்த்தைகளை
அழுத்திப் பிழிந்த இரசத்தை
விழிகள் உறிஞ்ச
மூளையில் மூளும் பெருந்தீயில்
மாயத்திரைகள் கரைய
மன இமை திறந்து
இருதயம் விழிக்கிறது.
சுழலும் இருதயச் சுடர்விழித்
தூய நோக்கில்
பட்டப்பகல் வெளிச்சமாய்த் தெரிகிறது
இகத்தில் பூரணமாய்ப் பொருந்திய
பராபர உண்மை.
உண்மை உணர்ந்த மெய்
பிறப்பெனும் கனவும்
இறப்பெனும் உறக்கமும்
கலைந்து
பேரின்பப் பெருவாழ்வில்
விழித்திருக்கிறது
ஜீவனுள்ள வார்த்தையாய்.

No comments: