Sunday, March 30, 2008

இறுதி வாக்குமூலம்

வீரிய விதைகளாய்
மண்ணில் விழுந்தோமென்பதை
மறந்ததால்
அமர விருட்சங்களாய்
விண் நோக்கி எழாமல்
சிதைகளில் எரிந்தோம்
உன் தாய் தந்தையராம்
யாம்

உயிரெமக்கு மெய்யுணர்த்தி
உன் மெய்யில் எம்முயிரைக் கரைத்து
மகன் நீ
எமக்குச் செய்த இறுதிக் கடனை
ஈடு செய்ய
அன்பாய் என்றென்றும்
உன் இருதயத்தில் வழிகிறோம்
யாம்

கலங்காதே மகனே
உன்னில் நீடூழி வாழ்கிறோம்
யாம்

No comments: