Saturday, March 29, 2008

சூரியன்

இமைகளைச் சுட்டு விலக்கி
விழிகளுக்குத் தன்னைப் புரியவைக்கும்
வான போதகன்

கிரண மந்திரம் பேசி
விழிகளுக்கு உலகை விளக்கும்
ஆகாய குரு

விழித் திரையில்
தன் கிரணத் தூரிகையால்
உலகை வரையும் ஓவியன்

தன் ஒளிப் பேனாவால்
விழித் தாள்களில்
உலகை எழுதும்
புதுக் கவிஞன்

தன் சுடும் மெய்யைச்
சுடச்சுடத் தந்து
என் மெய் சுடும்
வானவன்

தன் வெயில் நிழலால்
புவி தழுவும்
வான மரம்

கடல் நீருறிஞ்சி
மண்ணில் உப்பைச் செய்யும்
விண்ணகத் தொழிலாளி

No comments: