Sunday, August 10, 2008

சுவாசம் 2

சுத்த வெளியிலிருந்து வந்த நீ
சுத்தம் மறந்து அசுத்தமாய்ப் போன போது
உன் உள்ளே வந்து வெளியே போய்
மறுபடி மறுபடி
உன் உள்ளே வந்து வெளியே போய்
உனக்கு உயிரொளி ஊட்டி
உன் ஞான விழி திறந்து
உனக்கு மெய்வெளி காட்டி
நாம் அச்சிவாயமே(நாமச்சிவாயமே)
என்று நீ மறந்ததை நினைவுறுத்தும்
வாசியெனும் மூச்சுக் காற்று!

No comments: