Saturday, August 2, 2008

மெய்

மெய்யென்னும்
நம் உடம்பு மாளிகை
உன்னால் என்னால்
ஆகவில்லை!
அழிவிலா மெய்யன்பால்
அது திடமானது!

இம்மெய்யை உணராததாலே
மாளிகை
மறுபடி மறுபடி வீழுது!
இம்மெய்யை முழுதுணர்ந்தாலே
மெய்யாகவே
அழியாமல் நிற்குமன்றோ
மாளிகை!

No comments: