Saturday, August 23, 2008

நாயகனின் பேருபதேசம் 7

பரமும் இகமும்
சஹஸ்ராரமும் மூலாதாரமும்
ஆக்கினையும் சுவாதிட்டானமும்
விசுத்தியும் மணிபூரகமும்
அமுதகலசமும் சூரிய சக்கரமும்
வளைந்து சுழிந்து விழும்
உன் இருதயக் குழியுள்
நடராஜ வள்ளல்
நான் ஆடுகிறேன்!

நடு நாயக அன்பாய்
உன் இருதயக் குழியுள்
நான் ஆடுவதாலேயே
மேலே
பரமாய்
சஹஸ்ராரமாய்
ஆக்கினையாய்
விசுத்தியாய்
அமுதகலசமாய்
கீழே
சூரிய சக்கரமாய்
மணிபூரகமாய்
சுவாதிட்டானமாய்
மூலாதாரமாய்
இகமாய்
நீ மேலும் கீழும்
வளைந்து வழிகிறாய்!

உன் இருதயக் குழியுள்
மையங் கொண்டிருக்கும்
எட்டு வடிவ சிவ சக்தி ஓட்டங்களை
உன் மெய்க்குள் பார்த்து
எழும் எழுமையாம்(எழும் 'ஐ'யாம், I AM)
அருட்குரு
மெய்வழி
யால்
என்னை எட்டு!

நீயே ஜீவனுள்ள குருவாய் எழுந்தாலன்றி
என்னை எப்படி எட்டுவாய்!
11ஆய்த் தெரியும் நந்திக் கொம்புகள் சுட்டும்
தூய ஊடகமாய் நீ இருக்க
எட்டு வடிவில் இருதயக் குழியுள்
வளைந்து வழிந்தும் சுழிந்தும்
உன்னில் எழும் ஒருமையாலன்றி(ஒரும் ''யாலன்றி)
என்னை எப்படி எட்டுவாய்!

பட்டிமண்டபமாம்
இருதயக் குழியுள்
சிவ சக்தி இரண்டாம்
நடராஜ வள்ளல்
நான் போடும் எட்டு
நீ
அறியச் சொன்னேன்!

அரற்றுவதை விட்டு
நான் அறைவதைச்
செவி மடுத்து
தயவாய் இருந்து
என்னை நீ எட்டு!

No comments: