Monday, August 4, 2008

இரவில் விடியல்

கனவுகளும்
உறக்கமும்
இமைகளோடு ஒதுங்கி விட
அதீத விழிப்பில்
நள்ளிரவில் பட்டப்பகல் வெளிச்சம்

என் கழுத்தில்
கடவுளின் ஒளி முகம் முளைக்க
என் மெய்யில் பதியும்
கடவுளுண்மை

இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடந்தேடி
எங்கெங்கோ அலைந்து
களைத்துப் பின்
இருக்கும் இடத்துக்கே
திரும்பிய கணம்
ஞானத் தங்கமாய் ஜொலிஜொலிக்கும்
கடவுள் என்னில் அறிமுகம்

என் மெய்
கடவுளுண்மையில்
கரைந்து விட
கடவுளுண்மை
அன்பின் திடமாய்த்
திரள்கிறது
நான் இருக்கும் இடத்தில்

இருதய நெறியில்
இரவில் விடிகிறது
என் வாழ்க்கை!

விடியுமுன்
என் அறியா முகமாயிருந்த
கடவுளே
இனி என் அறிமுகம்!


தமிழ் மன்றத்தில் அமரன் அவர்களின் "மீண்டும் சந்திப்போமா" என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை

No comments: