Saturday, August 2, 2008

பேருபதேசம்

உதடுகளை அழுத்தி மூடி
நாவை மேலே சுழித்து
வாய்க்குள் அதனைப் பூட்டி
ஓடும் மனத்தைப் பிடித்து
இருதய அமைதியில் நிறுத்தி
சும்மா இருந்தேன் சொல்லற!
பேருணர்வாய் என்னுள் எழுந்து
"இரு தயவாய்" என்ற
பேருபதேசந் தந்தாய்
பேரருளாளன் நீ!

No comments: