ஆழ்ந்த மௌனத்தை
நான்
இன்னும் கற்கவில்லை
என் வேர்களை
இறுகப் பிடித்து
என்னைத் தாங்கும்
ஆழ்ந்த மௌனத்தின் மீது
சருகுகளாய்
மலர்களாய்
உதிர்ந்து விழுகின்றன
அஞ்ஞான வார்த்தைகள்
மாறாத
இலையுதிர் கால
மெய்ஞ்ஞானம் வாய்க்க
ஆழ்ந்த மௌனத்தை
நான்
இன்னும் கற்கவில்லை
விழுவனவற்றின்
இடைவெளிகளில்
எட்டிப் பார்க்கும்
அழிக்க முடியாத
ஆழ்ந்த மௌனத்தின்
அர்த்தகனத்தை
அறியாமல்
விழுவனவற்றின்
அறுக்க வேண்டிய
மாய வலைக்குள்
சிக்கியவனாய்
நான்
பழையன களைந்து
புதியன உடுத்தி
புதியன பழையனவாக
மீண்டும்
பழையன களைந்து
புதியன உடுத்தி
மீண்டும்
மீண்டும்
களைதலும்
உடுத்தலும்
பழகிய
அஞ்ஞானச் சுழற்சியுள்
நான்
களைய ஏதுமற்ற
உடுத்த விருப்புமற்ற
என் நிர்வாணம்
ஆழ்ந்த மௌனத்தின்
அடி முடி அளந்தும்
அடங்கிக் கிடக்க
ஞானியென்ற மமதையில்
ஒவ்வொரு கணமும்
விதவிதமாய்
உடுத்தி நிற்கும்
நான்
ஆழ்ந்த மௌனத்தை
நான்
இன்னும் கற்கவில்லை
என்றாலும்
என் அஞ்ஞான வார்த்தைகளின்
இடைவெளிகளில்
அதன் மெய்ஞ்ஞானத்தை
உங்களால்
உணர முடியும்
ஆழ்ந்த மௌனத்தின்
அடி முடி அளந்து
அடங்கிக் கிடக்கும்
உம் நிர்வாணத்தையும்
தரிசிக்க முடியும்
உம் நிர்வாணத்தைத்
தரிசித்த பின்
எந்த வார்த்தைகளும்
உமக்குப்
பிடிக்காமல் போகும்
நிலையாத வசந்தத்தில்
சித்தார்த்தர்களாய் நிற்கும்
நீவிர்
மாறாத இலையுதிர் காலத்தில்
புத்தர்களானால்
என் அஞ்ஞான வார்த்தைகளும்
அர்த்தப்படும்
நான் வடித்த கவிதைகளின் தொகுப்பு
Friday, May 9, 2008
ஆழ்ந்த மௌனம்
Subscribe to:
Post Comments (Atom)
About Me
- N Nagarajan
- Chennai, Tamil Nadu, India
- மூளையின் மறை கழன்று இருதய குகையில் வாழ்பவன்
Blog Archive
-
►
2008
(254)
-
►
August
(22)
- நாயகனின் பேருபதேசம் 8
- நாயகனின் பேருபதேசம் 7
- உனதுண்மை
- செதுக்கல்-2
- செதுக்கல்-1
- அருட்புரட்சி
- நரை ஒழி!
- சுவாசம் 2
- சுவாசம் 1
- நாயகனின் பேருபதேசம் 6
- நாயகனின் பேருபதேசம் 5
- உயிர் போகும் கேள்வி?
- ஞானயுக ஆத்திச்சூடி???!!!
- நாயகனின் பேருபதேசம் 4
- அருட்பதிவு
- படைத்தல், காத்தல், அழித்தல்
- ஓம் நமசிவய
- பரிணாமப் பாய்ச்சல்
- இரவில் விடியல்
- வேள்வி!
- பேருபதேசம்
- மெய்
-
►
August
(22)
0 comments:
Post a Comment