Sunday, May 11, 2008

நன்னம்பிக்கை முனை

எல்லாக் கீற்றுகளும்
உலர்ந்து போய்த்
தாழ்ந்து கிடக்கின்றன.
எழுந்து நிற்கும் சக்தி
மொத்தாமாய்ச் செத்து
எக்கணமும்
கழன்று விழக்
காத்திருக்கின்றன

தென்னை மரம் என்னவோ
இன்னும்
நம்பிக்கையோடு தான்
உயர்ந்து நிற்கிறது

தினமும்
பல முறை
பார்த்து வருகிறேன்
தென்னையில்
என்னை

உயிர் போகும்
கேள்வியோடு
இன்னும்
உயிரோடு

கருங்காக்கையொன்று
அமர்கிறது
தென்னையில்

நன்னம்பிக்கை முனையொன்று
முளைக்கிறது
என்னில்

No comments: