Sunday, May 11, 2008

சங்கமம்

காத்திருக்கிறேன்.
மனக் குளத்தில்
வார்த்தைக் கற்களாக விழுந்து
பொழுது கழிகிறது.
ஒன்று
இரண்டு
மூன்று
..........
..........
..........
..........
ஆ...
கவிதைக் காதலி
எழுந்து வருகிறாள்
அலைபாயும் குளத்திலிருந்து
என்னை நோக்கி
ஈரம் சொட்டச் சொட்ட

வார்த்தைக் கற்கள் தீர்ந்துவிடப்
பொழுதும் நின்றுவிட
வளியிடைப் போகா முயக்கில்
எம் சங்கமம் நிகழ்கிறது

சிகர உச்சியிலிருந்து
உருண்டு விழுகின்றன
வார்த்தைக் கற்கள்
நின்றுவிட்ட பொழுதை
நகர்த்தி

No comments: