Sunday, January 16, 2011

பெயரற்றவன் - 2

இன்னதென்ற‌ இறுக்கம்
கிஞ்சித்தும் இல்லாப்
பரிபூரணத் தளர்வே
நான்

இன்னதென்று இறுகிக் கிடப்பதுகள்
ஒவ்வொன்றின் உள்ளுள்ளே
அன்பென்னும் இளகலின்
பரிபூரண விளக்கம்
நான்

ஞாலத் தெருக்களில்
கோல உருக்களில்
ஞான அருவமாய்
பரிபூரணமாய் இறைந்திருக்கிறேன்
நான்

நிலையிலாப் பெயர்களிடையே
நிலை பெயராதிருக்கிறேன்
நான்

காட்சிக்குப் புலப்படும்
ஞால விருட்சத்தின்
ஆணி வேர் நான்
ஞான ஆழத்தில்
நேசாதாரத்தில்
ஊன்றி ஒளிந்ததால்
தலைக் கனக் கிரீடங்கள்
நொறுங்கிச் சிதறினாலன்றி
இறுகிக் கிடப்பதுகள்
உணர முடியா
இருதய (கனம்)இளக்கம் நான்

முத்தமிழ் மன்றத்தில் அப்துல் காதர் அவர்களின் "பெயரற்றவன்" கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை

No comments: