Friday, January 21, 2011

அன்பின் கரங்கள்!

1

இருதய அன்பை
உலகில் பகிரவே
கரங்கள்

2

அங்கையில் கனியாய்
இருதயத் திரு பூமி
இருக்கும் மெய்ம்மை
உன் கையும் என் கையும்
அவன் கையும் அவள் கையும்
நம் கையாகப் புரியும்!

3

இருதய ஒருமையில்
மனிதக் கரங்கள் இணைந்திருக்க
உயிர்த்தெழும் திரு பூமி!

4

ஒன்றே இருதயம்
என்றே உணர்ந்தால்
அன்பின் பிணைப்பில்
இணையுங் கரங்கள்
நன்றே செய்யும்
இன்பத் திரு பூமி!

5

ஆணவக் கொழுப்பால்
ஆயுதத் தழும்புகள்
ஏறிய கரங்கள்
ஆண்டவ இற(ர)க்கத்தால்
நேசத்தில் தழுவ
அன்னை பூமியின்
சுக சொரூபம்!

6

அருண்மை பொருந்திய நம்மிரு கரங்கள்
திரு பூமி உருவாக்கும் அன்பின் வரங்கள்

No comments: