Thursday, January 27, 2011

இருதய நலங்கள் ஆறு-The Six Heart Virtues-The Lyricus Teaching

1. APPRECIATION
சமரச நாதம் கேட்டு
எங்கும் இறைந்திருக்கும்
ஆதி மூலம் போற்று!
2. UNDERSTANDING
எதிலும் ஒளிரும்
இறைத்துகள் கண்டு
ஞானங் கொள்!
3. COMPASSION
எப்போதும் பாயும்
உயிர்ப்பை நுகர்ந்து
தயவாய் இரு!
4. FORGIVENESS
பொழியும் பெருமன்னிப்பாம்
அருமருந்தைச் சுவைத்து
இருவினை நோய் தீர்ந்துப்
பெருவாழ்வில் நில்!
5. HUMILITY
உயிர்களின் துயர் துடைக்க
உதவும் எளியனாய்
மன இதத்தில் எழு!
6. VALOR
வீர திடமாய்
ஈர பூமி மேல் ஓங்கி
அபயம் அளிக்க
உயிர்களைத் தொடு!

நடுநிலை ஏழாம்
நின் இருதய வாய் திறக்கப்
பாயும் ஆறு இவை
அன்பின் ஆறு முகம்!

நன்றி: லிரிக்கஸ்

No comments: