Friday, January 21, 2011

சுழிதலும் வழிதலும்

உள்ளே சுழியும் ஆறு(6) போல்
நெஞ்சுள்ளே சுழிந்து மனம் ஆறு!
வெளியே வழியும் தலை கீழ் ஆறு(9) போல்
மெய்யுள்ளே வழியும் பார் பாலாறு!
(6 = உள்ளே சுழிதல் = Spiraling in, 9 = தலை கீழ் 6 = வெளியே வழிதல் = Spiraling out)

உலகம் உள்ளே சுழிந்தால் கடவுள்
கடவுள் வெளியே வழிந்தால் உலகம்

உள்ளே சுழிதல் உன் கடமை
வெளியே வழிதல் கடவுளின் இறைமை

சுழிவின் முடிவில் வழியுங் கடவுள்
வழிவின் முடிவில் சுழியும் மனிதன்

சுழிதல் மனிதன் தான் கடவுளில் கழிதல்
வழிதல் கடவுள் தான் மனிதனில் கூடல்

சுழிதல் உருவம் அருவத்தில் கரைதல்
வழிதல் அருவம் உருவத்தில் இறைதல்

இருதயத்தின் அப்பால் அன்பாய்ச் அருளாய்ச் சுழி
இருதயத்தின் இப்பால் தயவாய்ப் பொருளாய் வழி

இ(1)
ரு(2)
த(3)
ய(4)
ம்(5, 6வது மேற் புள்ளி)
(7, பரம இரகசியப் பர நாதம்)

'ம்' முடிவில் அதி சூக்குமப் பர விந்துப் புள்ளியுள்
ஏழாம் அறிவின் பர நாதம்

No comments: