Monday, January 24, 2011

சிவத்தே வசி

சிவத்தே வசி
அவத்தை அரி
தவத்தை அறி
தயைநீ புரி

சிவமே அறி(ரி)
அருளே புரி
கருணை பொழி
திருவாய் விழி

அகத்தே பதி
சிவமெது அறி
அன்பது புரி
வன்மனம் உரி

உள்ளே கட‌
உண்*மை உண‌
நெஞ்சைப் பிள‌
கண்மை திற‌

அருளே பொருளாம்
ம‌றவா திரு
அன்பே உருவாய்
இறவா திரு

பதியொரு வலவன்
உருவிலா நலவன்
உருவுனில் உளவன்
உணர்வொடு எலாம்பதி

அகத்தினில் ஒளிந்தவன்
சகத்தினில் ஒளிர்பவன்
உடம்பினில் உயிரவன்
உணர்வொடு எலாம்பதி

படத்தினில் பிடிபடான்
திடத்தினில் அடைபடான்
கடத்தினில் உறைபவன்
உணர்வொடு எலாம்பதி

சடங்கினால் வசப்படான்
சமரச அகத்துளான்
ஒருவனாங் கணவனின்
உணர்வொடு எலாம்பதி

இருதயத் ததிருதே
சமரச முழக்கமே
கவனமாய் மொழியதன்
உணர்வொடு எலாம்பதி

இருதயத் தொளிருதே
சமரசத் திருநெறி
கவனமாய் வழியதன்
உணர்வொடு எலாம்பதி

யாவுளும் அகமுகன்
சாவிலாப் பெரியவன்
புகழ்ந்திட உரியவன்
உணர்வொடு எலாம்பதி

No comments: