Thursday, January 27, 2011

எளிய தந்திரம்!

அன்பெனும் ஆதி மூலம்
இருதயம் வழியே உயிர்ப்பாய்க்
கடத்துள் தடம் பதிய
மூல ஞானம்
கடத்தை மாயா மெய்யாய்
இரசவாதம் செய்ய
இறைத்துகள் "நான்"
பூரண சுதந்திர நிலையை
ஞாபகங் கொள்ளத்
திரு பூமியெங்கும்
உயிர்த்திரள் யாவும்
ஆதி மூல முழுமையில்
ஆன்ம நேய ஒருமையில்
சமரசமாம் வாய்மையில்
என்றென்றும் இன்புற்றிருக்கும்

_________________________________

ஆதி மூலக் கடவுள்
இருதயப் பாலத்தின்
அப்பக்கம்!
தூலமான மனிதம்
இருதயப் பாலத்தின்
இப்பக்கம்!
இருதயப் பாலம்
இரண்டுக்கும் நடுவே
உப்பக்கம்!
அப்பக்க உயிர் நிலை
உப்பக்கப் பாலத்தினூடே
இப்பக்க மெய்க்குள்ளே
மூச்சாய் இயங்கும் எளிமை புரிய
மனத்தை மூச்சின் மேல்
இலயிக்கச் செய்தால் போதும்!

இருதய வய நாட்டம்!(Heart Focus)
இருதய உயிரோட்டம்!(Heart Breath)
இருதய உணர்வேற்றம்!(Heart Feeling)

நடுமார்பின் மேல் வலக் கரத்தை வைத்து
இடக் கரத்தை மடியின் மேல் மேல் நோக்கி இருத்தி
மனத்தை இருதயத்தில் நிறுத்தி
மூச்சின் மேல் முழு கவனம் வைத்து
இருதய அன்பின் ஆறு முகங்களை
உணரும் முனைப்போடிருக்க
ஆதி மூலக் கடவுள்
தூலமான மனிதத்தில்
எளிதாய் நிச்சயம் நடக்கும்!

அன்பின் ஆறு முகங்கள்
1. நல நாட்டம்(நன்றியறிதல்)(Appreciation)
2. தயவு(Compassion)
3. மன்னிக்கும் மனோபாவம்(Forgiveness)
4. எளிமை(Humility)
5. புரிதல்(Understanding)
6. வீரம்(Valor)

நன்றி: விங்க்மேக்கர்ஸ், லிரிக்கஸ் மற்றும் ஹார்ட்மேத்

No comments: