Sunday, January 23, 2011

கட!உள் - 4

சடங்குத் தடபுடல் தவிர்த்து உள்ளே
கடக்கும் அகத்தவம் செய்

செய்யது தவத்தால் அகமது திறக்கப்
பொன்னுரு முகமது நூர்
(நூர் = ஒளி என்று பொருள் படும் அரபு மொழிச் சொல்)

நூரதைக் காணாய் வேரதைச் சேராய்
தூலமே காண்பாய் நீ

தூலமே காணும் ஊனப் புலனால்
ஞானமோ காண்பாய் நீ

தூலஞ் சூக்குமந் தாண்டிய அதிசூக்கும
நூரே ஞால வேராம்

ஞால வேரைக் காட்டும் ஞானம்
நேசா தார மோனம்

நேசா தார மோனம் புரியா
நாகப் பிதற்றல் அஞ்ஞானம்

நேசா தாரஞ் சேரு நீயே
பேசா தாகுஞ் ஞானம்
(நேசாதாரம் = இருதயம், அனாகத சக்கரத்து மேலுள்ள அமுத கலசமாம் தைமஸ் சக்கரம்)

No comments: