Sunday, February 3, 2008

புதிய வார்ப்பு

நிசப்த ஓலமிடும் வெண்தாள்கள்
செவிகளில் பறையறைந்து
நெற்றியை விழிக்கச் செய்கின்றன

வெண்தாள்களின் நாவுகளைச்
சுட்டுக் கருக்க
விரல்களுக்கிடையே
நெற்றிப் பார்வை
தீப்பிழம்பாய் நீளும்

அந்நாவுகள் கருகும் நெடி
உறைந்த புலன்களை உருக்கிக்
கவிதையில் வார்க்கும்

உறைந்த ஐந்து
உருகிப் பாய்ந்த பின்
ஆறாகும்
புதிய வார்ப்பு

பரிணாமப் பாய்ச்சல்
அரிது அரிது

No comments: