Sunday, February 3, 2008

சிதம்பர ரகசியம்

உச்சிவெளியால் வெளுக்கும் நெற்றிஒளியில்
அச்சிதம்பர ரகசியம் வெளிப்படும்

வளிவழிப்படும் ஒளிதான் அளித்திடும்
அளிஅமுதால் மெய்தான் களித்திடும்
மெய்க்களியால் மெய்தான் கரைந்திடும்
உய்ந்தடையும் வெளியுள் ஒளியாய்

பூரணப்பெருவெளி மெய்தான் மெய்தான்
அதன்நடுஒளியும் மெய்தான் மெய்தான்
ஆரமுதளியும் மெய்தான் மெய்தான்
அதன்முன்வளியும் மெய்தான் மெய்தான்
ஆனந்தக்களியும் மெய்தான் மெய்தான்
தானந்தமில்லா மெய்தான் மெய்தான்

வெளியுள் ஒளியும் வளியின் கொடைதான்
அளியும் தெளிவாய் ஓளியின் கொடைதான்
மெய்யாய்க் களியும் அளியின் கொடைதான்
உயிர்க்கும் மெய்யும் களியின் கொடைதான்
மெய்யாய் யாவும் வெளியின் கொடைதான்
பயின்றால் மெய்யைத் தெளியும் மெய்தான்

உச்சிவெளியுள் மறையும் நெற்றிஒளியால்
அச்சிதம்பரம் ரகசியமாய் ஒளியும்

வளியும் அளியும் மெய்க்களியும்
ஒளியுள் ஒளிய மெய்த்தெளிவாய்
ஒளியும் வெளியுள் தான் கரைந்தேக
வெளியுள் வெளியாய் நான்மறைந்தேனே

உச்சி பிளந்துன் உள்ளே வெளிபுக
அச்சி தம்பர ஒளி

அச்சி தம்பர ஒளியால் மெய்க்குள்
சத்தி யஞானக் களி

சத்தி யஞானக் களியால் மெய்க்காம்
நித்தி யப்பெரு வாழ்வு

நித்தி யப்பெரு வாழ்வை யார்க்கும்
நிச்ச யஞ்செய் அருள்

நிச்ச யஞ்செய் அருளை அதுவே
உச்சி பிளக்கும் வெளி

உச்சி பிளக்கும் வெளியாம் அருளே
அச்சி தம்பர ஒளி

No comments: