Thursday, February 28, 2008

விழிப்புத் தவம்

எதுவுமில்லை
கழிந்தவற்றின் ஞாபகச் சுவடுகள் கூட
அழிந்து போன மகா வெறுமை.
அவ்வெறுமையை முழுமையாக
ஆக்கிரமித்திருக்கிறது
இருப்பு.

கேள்விகள் தீர்ந்து போன
உறுதியான பதிலாய்
ஒருமையுணர்வில்
எண்ணற்ற உள்ளதுகளைத்
தழுவியிருக்கிறது
இருப்பு

ஆக்கிரமிப்பில்லாத
இத்தழுவலின் நுண்ணிய அழுத்தம்
உள்ளதுகளில் ஒன்றான என்னில்
பேரன்பாய்ப் பதிய
என்னை விழுங்கி
என்னைப் போல்
பேரன்பு பதிந்த
பற்பல உள்ளதுகளையும் விழுங்கி
இன்னும் விழுங்கப்
பசித்திருக்கிறது
பிரம்மாண்டமான்
இருப்பு

தன் பேரன்பைப் பதித்து
உள்ளதுகளை விழுங்கும் கணங்களை
எதிர்நோக்கித்
தன் தனிமையில்
நன்றாக விழித்திருக்கிறது
இருப்பு

No comments: