Tuesday, February 12, 2008

கவிதை சாகுபடி

விழிகளை விதைத்தேன்
கவிதையைக் கண்டேன்
செவிகளை விதைத்தேன்
கவிதையைக் கேட்டேன்
நாசியை விதைத்தேன்
கவிதையை நுகர்ந்தேன்
நாவினை விதைத்தேன்
கவிதையைச் சுவைத்தேன்
விரல்களை விதைத்தேன்
கவிதையைத் தொட்டேன்
மூளையை விதைத்தேன்
கவிதையை அறிந்தேன்
இருதயம் விதைத்தேன்
கவிதையை உணர்ந்தேன்
என்னையே விதைத்தேன்
நானே கவிதையானேன்

No comments: