Sunday, February 3, 2008

மந்திரக் குறள்

நித்தியமாய் வாழுமே என்பூரணம் யாவிலும்
நிச்சயமாம் நீதியதைக் காண்

அற்புதமாய் ஒளிருமே என்சுயஞ்சுடர் யாவிலும்
சிற்பரமாம் பதமதில் தோய்

பேரின்பப் பெருவாழ்வென் பேரிருப்பை யாவிலும்
பாரென்றும் இறவாநிலை சேர்

தெள்ளமுதாய்ப் பாயுமேயென் ஆன்மநேயம் யாவிலும்
வெள்ளமதாம் தேறலையே நாடு

என்னியல் விளங்குமே பேரன்பாய் யாவிலும்
அன்பதை இருதயத் தேந்து

No comments: