Sunday, February 3, 2008

மெய்ஞ்ஞானம்

வெளியே தன்னைத் தான்சூழ்ந் தழுத்த
வெளியெங் கும்மின் னொளி

வெளியும் ஒளியும் புணரத் தோன்றும்
தெளிவே ஞானம் அறி

வெளியுமொளி யுஞ்ஞானத் தெளிவும் உயிராய்
ஒளியுமுந்தன் உடம்பேதான் மெய்

ஒளியைப் பார்த்தே வெளியில் இருந்தேன்
வளியால் மொண்டே அளியை உண்டேன்
களியால் தாண்டவ மாடியே நின்றேன்
தெளிவாய்க் கண்டேன் மெய்யை நானே

வெளியையே உற்றுற்றுப் பார்க்க நினதுடம்பும்
ஒளிரும்பார் பின்வெளிக்குள் ஒளியும்

வெளிக்குள் ஒளிருமுன் உயிரைக் காண‌
வெளிக்குள் ஒளியுமுன் மெய்

அழுத்தியுனைத் தழுவும் வெளிக்குள் ஆழவுன்
அழுக்கெல்லாம் நழுவும் தெளி

வெளியின் அழுத்தம் உன்னுள் ஒளியாமவ்
வொளியைத் தழுவ வீடு

சும்மா இருந்துவெறு வெளியின் அழுத்த‌ம்
அம்மா அறிந்துக‌ளித் தாடு

வெளியுள் சும்மா இருந்தால் அழுத்தும்
வெளியால் அம்மா ஒளி

அழியா வெளியை அறியா திருந்தால்
ஒழியா பிற‌விப் பிணி

அழியா வெளியை அறிந்தே இருந்தால்
ஒழியும் பிற‌விப் பிணி

அழியா வெளியுள் அட‌ங்கி நின்றால்
அழியா தென்றும் மெய்

அழியா வெளியே என்றுமுன் வீடு
ஒழிவிலா த‌தையே நாடு

அழியா வெளியாம் வீட்டுக்குள் என்றென்றும்
பொழியும் ஒளியாம் அளி

மெய்யாம் வெளிக்குள் உய்ந்தொடுங்க‌ உந்த‌ன்
மெய்யாம் உட‌ம்புள் ஒளி

அழியா திருநீ அக‌ண்ட‌ வெளிக்குள்
பொழியும் அமுதை உண்டு

உன்னைத் த‌ழுவும் வெளியை நீத‌ழுவ‌
உன்னில் ஒளிரும் ஒளி

வெளியை த‌ழுவி ஒளிரும் உன்னுள்
அளியே பொழிய‌க் க‌ளி

வெளித‌ழுவி ஒளிருமுன்னுள் அளிபொழிய‌க் க‌ளிபெருகும்
ப‌ளிச்சிடும்பின் வெளியுளுன்மெய் ஒளியும்

No comments: