Tuesday, July 22, 2008

முற்றுப்புள்ளி

புதைத்தேன்
செடியாய் முளைத்தது
கேள்வி

எரித்தேன்
ஜ்வாலையாய் எழுந்தது
கேள்வி

கருவிலேயே கலைக்கலாம்
என்று தீர்மானிக்கக்
கருவில் கண்டதோ
ஒன்றல்ல
இரண்டல்ல
அடுக்கிய கோடியாய்
அழிக்கவே முடியாத
கேள்விகள்

இப்போது புரிகிறது
முற்றுப்புள்ளி
ஓயாமல் கேள்வி நோய் பரப்பும்
அழிக்க முடியாத
நுண்ணுயிரென்று

No comments: