Tuesday, July 22, 2008

ஈதேன் தோட்டம்

சிவப்பு முதல்
ஊதா வரை
ஏழு நிறப் பூக்கள்
என் மெய்க்குள்
எப்போதும்
ஒளிரும்
சக்கர தீபங்களாய்.
சப்த ஸ்வரங்கள்
எப்போதும்
ஒலிக்கும்
ஆன்ம கீதங்களாய்.
உயிர்ப்பில் ஓடும்
தீப வாசனை
கீதத் தீஞ்சுவை
உணர்வைத் தீண்ட
ஜீவ விருட்சமாய்
விழித்திருக்கிறேன்
நான்


தமிழ் மன்றத்தில் இளசு அவர்களின் "என் தோட்டம்" என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை

No comments: