Wednesday, July 9, 2008

அன்பின் வழியது உயிர்

பராபர அருளொளி பங்கமின்றிப் பாய
பராபரந் தருவழி உயிர்


பராபரந் தருவழி உயிரைத் திடமாய்த்
தராதலம் நிறுத்தும் மெய்


உள்ளே ஓடும் அன்பில் ஊறிஊறி
மெய்யைக் கரைத்தல் இன்பம்


அன்பில் மெய்யைக் கரைக்க ஆருயிர்த்
தன்மை புக்கும் வெளி


வெளியில் அருளாய் இருக்கும் பேறே
களிக்கும் நித்திய வாழ்வு


தந்திர வெளியில் தயவாய் இருப்பதே
மந்திர எழுத்தின் பயன்

No comments: