Tuesday, July 22, 2008

பட்டாம்பூச்சிகள்!

பார்வை மணக்கக்
காற்றில் மலர்கின்றன
பட்டாம்பூச்சிகள்!

நூலின்றி யார்
பறக்க விடுவது
இத்தனைப் பட்டங்கள்...!

படபடக்கும்
காற்றின் இமைகளோ
பட்டாம்பூச்சிகள்!

மலர்களின் மணக்கும் வண்ண கீதங்கள்
கேட்கும் காற்றின் காதுகளோ
பட்டாம்பூச்சிகள்!

குருட்டுக் காற்றின்
துழாவும் விரல்களோ
பட்டாம்பூச்சிகள்!

மௌனத்தின் மகுடி கேட்டெழும்
ஆயிரந்தலை காற்று நாகத்தின் படங்களோ
பட்டாம்பூச்சிகள்!

காற்றுக்கு வேர்க்கிறதா
எங்கிருந்து வந்தன
இத்தனை விசிறிகள்...!

என் மௌனத்தில்
கவிதைகளாய்ப் பறந்தன
பட்டாம்பூச்சிகள்!

மரங்கள் தம் நெற்றிக்கண்களாம்
மலர்களைத் திறக்கப்
பறக்கும் வண்ணத் தீப்பொறிகளோ!



கவிதைகள் வாசிக்க வாருங்கள்
பச்சைப் புல்வெளியில்
பட்டாம்பூச்சிகள்!

No comments: