Saturday, July 26, 2008

கடவுளின் பதில்

என் இருதய நிஜத்தை மறந்து
அன்பெனும் என் இயலைத் துறந்து
உருவானதே வஞ்சக மனத்தின்
வன்செயல் அறியாயோ நீ மனிதா!

நான் கொடுத்த தென்னவோ
உனக்கு வெள்ளை உள்ளம்!
அம்மனத்தைக் கருத்துத் திரித்தே
அவல மனைத்தும் நீயே விதித்தாய்!

உன் மெய்க் கோயிலில் உவந்து
குடியிருக்கும் என்மெய் மறந்து
வெளியே வீண்பொய்க் கோயிலில்
எனைப்புனைந் ததாரோ நீயே மனிதா!

சத்திய யுகந்தன்னை நானுனக்குத் தந்தேன்
சத்தியந் தன்னைப்பொய் மாயையால் மறைத்து
இருண்ட கலியுகம் நீதானே படைத்தாய்
கடவுள் என்னைக் குறைகூறல் முறையோ!


நிலா முற்றத்தில் மா. கலை அரசன் அவர்களின் "கடவுள் நீ தானா?" என்ற கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை

No comments: