Tuesday, July 22, 2008

ஒருமையுணர்வு

ஒரு பக்கம்
தலையாக மனிதனாம் நீ!
மறு பக்கம்
இருதயப் பூவாகக் கடவுளாம் நான்!
கூறு போட முடியாத
தங்க நாணயம்
நாம்!
தகதகவென மின்னும்
நம் ஒருமையுணர்வு!
உலகெங்கும் செல்லும்
நம் பொன்னொளி!
நீ
ஒரு செல்லாக் காசு
என்ற மனப்பிரமையை விட்டுத்
தங்க நாணயமாய்த்
தகதகவென எழு!
"ஐ யாம்"(I AM) என்ற
ஒருமையுணர்வில்
ஓங்கி எழு!
இப்போதே!

No comments: